Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரளிகள்: பள்ளிகளில் "காலர் ஐடி" தொலைபேசி !

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தொலைபேசி வசதி உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் அழைப்பவர் யார் என்பதை அறியும் வசதிகொண்ட "காலர் ஐடி" கொண்ட தொலைபேசிகளை உடனடியாக பொருத்துமாறு முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சென்னை நகரில் கடந்த சில தினங்களாக பல பள்ளிகளில் வெடிகுண்டு புரளி கிளப்பப்பட்டுவருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 26 பள்ளிகளுக்கு தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல்வந்தது.

கும்பகோணம் தீ விபத்தையடுத்து பீதியில் இருக்கும் பெற்றோரை இந்த வெடிகுணடு புரளிகள்பெரும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளன. குண்டு வைத்திருப்பதாக தகவல் பரவியதும் மாணவ,மாணவிகளை பள்ளிகளை விட்டு ஓடுமாறு ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

இதில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளில் நெரிசலில் மிதிபட்டு பலத்தகாயமடைந்துள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை முதல் நாளை வரை பல பள்ளிகளுக்கு விடுமுறைவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. ஆரம்ப கட்ட விசாரணையில் இந்தபுரளிகளுக்கு 3 மாணவிகள்தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந் நிலையில் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அவசர அறிக்கையில், இதுபோன்றநிகழ்வுகளை எதிர்காலத்தில் தவிர்க்கும் பொருட்டு புரளிகளை கிளப்புவோர் மீது கடும் நடவடிக்கைஎடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், பள்ளி நிர்வாகங்களும் இதுபோன்ற சமயங்களில் போலீஸார் துரிதமாகசெயல்படுவதற்கு உதவியாக இருக்க வேண்டும். இதற்காக தொலைபேசி வசதி உள்ள அனைத்துப்பள்ளிகளிலும் உடனடியாக காலர் ஐடி வசதி கொண்ட தொலைபேசிகளை நிறுவ வேண்டும்.

இதன்மூலம் குற்றவாளிகள் உடனடியாகப் பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். அதேபோல, காவல்நலையங்கள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், அரசு கட்டடங்கள் ஆகியவற்றிலும் இந்தகாலர் ஐடி வசதி கொண்ட தொலைபேசிகள் பயன்படுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

நெரிசலில் மிதிபட்ட குழந்தைகள்:

இதற்கிடையே, நெரிசலில் சிக்கி பலத்த காயமடைந்த 7 மாணவ, மாணவிகளுக்கு சென்னைஅப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சூளைமேடு செளராஷ்டிரா தெருவில் உள்ள ஜான் மில்டன் நர்சரிப் பள்ளியில் வெடிகுண்டு புரளிகிளம்பியதும், அப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளிக்கு படையெடுத்துவந்தனர்.

பள்ளிக்குள் வேகமாக நுழைந்த அவர்கள் ஏற்கனவே பதற்றத்துடன் ஓடிவந்து கொண்டிருந்தகுழந்தைகளுக்கு மத்தியில் புகுந்து தங்களது குழந்தைகளைத் தேடினர்.

இந்த நெரிசலில் பாரதி, சங்கீதா, பிரின்ஸி, அப்துல் ரஷீத், வெங்கடேசன், பவித்ரா, பிரவீனாஆகிய7 குழந்தைகள் மிதிபட்டு பலத்த காயமடைந்துள்ளனர். இவர்கள் அப்பல்லோவில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து சென்னை நகரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+