கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சினை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையில் திமுக தலைவர் கருணாநிதி மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதில் அளித்து நிதியமைச்சரும், அவைமுன்னவருமான பொன்னையன் பேசுகையில், சட்டசபையில் குறுகிய காலக் கூட்டத்தொடர்கள் இதற்கு முன்பு சிலமுறை நடந்துள்ளன.
ஆனால் இந்த உண்மை தெரியாமல், என்னையும், தமிழக முதல்வரையும், சட்டசபை சபாநாயகரையும் விமர்சித்துதிமுக தலைவர் கருணாநிதி தனது கட்சிப் பத்திரிக்கையில் கட்டுரை எழுதியுள்ளார். இதன் மூலம் அவையின்உரிமையை அவர் மீறியுள்ளார் என்று கூறி உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்தார்.
இந்தப் பிரச்சினையை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பி வைப்பதாக சபாநாயகர் காளிமுத்து அறிவித்தார்.












Click it and Unblock the Notifications