அருங்காட்சியமாகும் எம்ஜிஆர் நினைவிடம்
சென்னை:
எம்ஜிஆர் நினைவிடத்தை அருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
சென்னையின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் எம்ஜிஆர் சமாதியும் ஒன்று. இந்த நினைவிடத்தை எம்ஜிஆர் நினைவுஅருங்காட்சியகமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக சதுக்க வளாகத்தில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில்அருங்காட்சியகம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
இந்த அருங்காட்சியகத்தில் எம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள் இடம் பெறுகின்றன. சிறு வயது முதல் அவரதுமறைவு வரையிலான சம்பவங்களை விவரிக்கும் வகையில் பல்வேறு புகைப்படங்கள் வைக்கப்பட உள்ளன.
அரசியல் தலைவர்களுடன் அவர் உள்ள படங்களும் வைக்கப்படுகின்றன. மேலும் அவர் பயன்படுத்திய தொப்பி,கண்ணாடி, கைக்கடிகாரங்கள், பெல்ட் போன்ற பொருட்கள், அவரது கடிதங்கள், டைரி குறிப்புகள், ஷூக்கள்,உடைகள், பேனாக்கள் ஆகியவையும் வைக்கப்படுகின்றன.
எம்ஜிஆரின் மார்பளவு சிலையும் அருங்காட்சியகத்தில் நிறுவப்படுகிறது. இந்த அருங்காட்சியகத்தை எம்ஜிஆரின்நினைவு நாளான டிசம்பர் 24-ம் தேதி அல்லது பிறந்த நாளான ஜனவரி 17ம் தேதி முதல்வர் ஜெயலலிதா திறந்துவைக்கிறார்.