கும்பகோணத்தில் இன்று சிறப்பு வழிபாடு
Subscribe to Oneindia Tamil
கும்பகோணம்:
கும்பகோணம் தீவிபத்தில் பலியான குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைவதற்காக விஸ்வ இந்து பரீஷத் சார்பில்கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீவிபத்தில் 93 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. இந்த குழந்தைகளின் ஆத்மாசாந்தி அடைவதற்காக பல்வேறு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந் நிலையில் கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாலை 4 மணிக்கு இந்த சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது.
நாகப்பட்டனம் மாவட்ட விஸ்வ இந்து பரீஷத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு வழிபாட்டில்அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட வி.எச்.பி. தலைவர் வாஞ்சிநாதன் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications