பாதிக்கப்பட்டோருக்கு செஞ்சிலுவை சங்கம் ஆறுதல்
திருச்சி:
கும்பகோணம் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்தியசெஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுதல் கூறி அவர்களுக்கு மன வள ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.
இதுகுறித்து இந்திய செஞ்சிலுவைச் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் விமலா ராமலிங்கம் திருச்சியில்செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களது அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் காந்திமதி, மாநிலத்தலைவர் டாக்டர் சரோஜினி வரதப்பன் உள்ளிட்ட பலர் கும்பகோணம் சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளைப்பார்த்து ஆறுதல் கூறினோம்.
கும்பகோணம் விபத்தால் மனதளவில் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளகுழந்தைகள், அவர்களது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு மன வள ஆலோசனைகள் கூறிஅவர்களை இயல்பு நிலைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளோம்.
இதற்காக எங்களது அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கத்திலிருந்து 2 நிபுணர்கள் வரவழைக்கப்படவுள்ளனர்.இதேபோல, குஜராத் பூகம்பத்தில் பாதிக்கப்பட்டோருக்கு மன வள ஆறுதல் கூறிய அனுபவம் உள்ள மேலும் 5பேரும் கும்பகோணத்திற்கு அனுப்பி வைக்கப்படுவர்.
ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த ஆலோசனைகள் தொடங்கும். இந்த ஆலோசனையின்போது கும்பகோணத்தில்உள்ள செஞ்சிலுவைச் சங்கம் தேர்ந்தெடுக்கும் 20 மாணவ, மாணவியர் மற்றும் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளைச்சேர்ந்த தலா 5 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications