சென்னை பள்ளியில் மீண்டும் வெடிகுண்டு புரளி
சென்னை:
சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் பல பள்ளிகளில் வெடிகுண்டு புரளி கிளம்பிய பதற்றத்திலிருந்து பெற்றோர்களும்,மாணவர்களும் மீளாத நிலையில், சென்னை பள்ளியில் மீண்டும் வெடிகுண்டு புரளி கிளம்பி பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை நகரில் சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் நூற்றுக்கணக்கான பள்ளிகளில் வெடிகுண்டு புரளி கிளம்பியது. இதனால்மாணவ, மாணவியர் பீதியடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். பள்ளிகளும் 3 நாட்களுக்கு மூடப்பட்டன.
இந் நிலையில், திருவான்மியூரில் உள்ள சங்கரா பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அங்கு பீதி ஏற்பட்டது. பள்ளிக்கூடம்மூடப்பட்டு பிள்ளைகள் அனைவரும் வீடுகளுக்குத் திரும்பினர்.
சங்கரா பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தனக்குத் தகவல் கிடைத்துள்ளதாக ஒரு மாணவியின் பெற்றோர்மற்றவர்களிடம் கூறவே, அனைவரும் திரண்டு பள்ளிக்கு வந்தனர். தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்புமாறு அவர்கள்ஆசிரியர்களை வலியுறுத்தினர்.
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் எதுவும் வரவில்லை என்று ஆசிரியர்கள் கூறியும் அவர்கள் கேட்கவில்லை. இதனால் வேறுவழியின்றி பள்ளிக்கூடம் மூடப்பட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதேபோல, அருகில் மேலும் 2 பள்ளிக்கூடங்களிலும் பெற்றோர்கள் மூலம் வதந்தி பரவி அங்கும் பள்ளி மூடப்பட்டு பிள்ளைகள்வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.












Click it and Unblock the Notifications