வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காலவரையற்ற வேலை நிறுத்தத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு எதிராகநிறைவேற்றிய தீர்மானங்களை திரும்பப் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் கடும்எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ரிட் மனுக்களை விசாரிக்கும் அதிகாரத்தை வழங்கிய தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிஉடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை முதல் சென்னைஉயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர்களின் சங்க நிர்வாகிகளை உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேரில் அழைத்துபோராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

தலைமை நீதிபதிக்கு எதிரான கருத்துக்கள், தீர்மானங்களை வாபஸ் பெற வேண்டும், போராட்டத்தைக் கைவிட்டுவிட்டுபணிக்குத் திரும்ப வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அப்படிப் பணிக்குத் திரும்பாவிட்டால் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் நடத்தி வரும்வழக்குகளில் வழக்குகளின் தன்மைக்கேற்ப தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

நீதிபதிகளின் எச்சரிக்கை குறித்து இன்று கூடும் அவசர பொதுக்குழுக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

நீதிபதிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய பிரபாகரன், தனது வழக்கமான கோபாவேசத்துடன் பேசாமல்,அடங்கி-ஒடுங்கிப் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+