For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விரட்டப்பட்ட வெளியூர் வழக்கறிஞர்கள்

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:-

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளி தீ விபத்து தொடர்பாக கைதானவர்களுக்கு ஆதரவாக வெளியூர் வழக்கறிஞர்கள் ஆஜராவதற்குஎதிர்ப்பு தெரிவித்து கும்பகோணம் நீதிமன்றத்தில் உள்ளூர் வழக்கறிஞர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

கிருஷ்ணா பள்ளி விபத்து தொடர்பாகக் கைதாகியுள்ள பள்ளி நிர்வாகிகள், கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு ஆதரவாகயாரும் ஆஜராவதில்லை என்று கும்பகோணம் வழக்கறிஞர்கள் தீர்மானம் போட்டுள்ளனர். வெளியூர் வழக்கறிஞர்களையும்அனுமதிப்பதில்லை என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந் நிலையில் கைதாகியுள்ள கல்வித்துறை அதிகாரிகளான பாலாஜி, பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 9 பேர் கும்பகோணம் தலைமைகுற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது 9 பேருக்கு ஆதரவாக மதுரை மற்றும் தஞ்சாவூரைச் சேர்ந்த இரண்டு வழக்கறிஞர்கள்ஆஜராக வந்தனர்.

இதையடுத்து அங்கு கூடியிருந்த கும்பகோணம் வழக்கறிஞர்கள், இருவரையும் சூழ்ந்து கொண்டு ஆஜராகக் கூடாது என்றுசொல்லி கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நீண்ட நேரம் இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து வெளியூர் வழக்கறிஞர்கள் அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X