For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் ஒரு சிறுவன் பலி: சாவு 94 ஆனது

By Staff
Google Oneindia Tamil News

கும்பகோணம்:

கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் படுகாயமடைந்த இன்னொரு குழந்தையும் இறந்தது. இதனால் பலியான குழந்தைகளின்எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

கும்பகோணம் கிருஷ்ணா பள்ளியில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 90 குழந்தைகள் கருகி இறந்தன. காயமடைந்த 20குழந்தைகள் தஞ்சை மற்றும் கும்பகோணம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தன.

இதில் 3 குழந்தைகள் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த வாரத்தில் இறந்தன. இந் நிலையில் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த 7 சிறுவன் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 2.30 மணிக்கு உயிரிழந்தான். இவன் மூன்றாம் வகுப்பு படித்துவந்த மாணவனாவான்.

இதையடுத்து சாவு எண்ணிக்கை 94 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 16 குழந்தைகள் தொடர்ந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 14 பேர் அரசுமருத்துவமனைகளிலும் 2 பேர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X