தந்தை, மகன் கொலை: முகமூடிக் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

கடலூர்:

கடலூரில் எண்ணெய் வியாபாரியின் வீட்டிற்குள் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் தந்தை, மகனை கொன்று விட்டு நகை,பணத்தைத் திருடிச் சென்றனர்.

கடலூர் துமுைறகம் இருசப்பர் தெருவைச் சேர்ந்தவர் எண்ணெய் வியாபாரி சண்முகம்.

இவரது வீட்டுக்குள் இன்று அதிகாலை கொள்ளையர்கள் புகுந்தனர். தூங்கிக் கொண்டிருந்த சண்முகம், அவரது மகன் சங்கரன்,சங்கரனின் மனைவி ஜனராணி ஆகியோரை சரமாரியாக உருட்டுக் கட்டைகளால் தாக்கினர். இதில் 3 பேருக்கும் மண்டைஉடைந்தது. ரத்த வெள்ளத்தில் அவர்கள் மயக்கமாயினர்.

இதையடுத்து வீட்டிலிருந்த நகை, பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு அக் கும்பல் தப்பியது.

சம்பவம் குறித்து அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வந்து பார்த்தபோது,சண்முகமும், சங்கரனும் அதிக ரத்தம் வெளியேறியதால் இறந்து போயிருந்தனர்.

படுகாயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் ஜனராணி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அதிகாலையில் நடந்த இந்த இரட்டைக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் கடலூரை உலுக்கியுள்ளது.

சமீபகாலமாக தமிழகத்தில் கொலை, கொள்ளைகள் அதிக அளவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+