டிஐஜிக்கு எதிராக சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
அடிக்கடி தன்னை இடம் மாற்றம் செய்து டிஐஜி விஜயக்குமார் தனக்கு மனரீதியில் பெரும் தொல்லை கொடுத்து வருவதாகக் கூறி,அவருக்கு எதிராக சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜேசு என்ற அந்த சப் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்துள்ள மனுவில், விருதுநகர் சரக டிஐஜியான விஜயக்குமார் என்னை அடிக்கடி
இடம் மாற்றம் செய்கிறார். இதனால் எனக்கும், எனது குடும்பத்தினருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.இதனால் பணரீதியிலும் மனரீதியிலும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகிறேன். இதனால், இனிமேல் என்னை எங்கும் இடம்மாற்றம் செய்யக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார் ஜேசு.












Click it and Unblock the Notifications