மூகாம்பிகையை தரிசிக்க ஜெ. நாளை கர்நாடகம் பயணம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிகா நாளை கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்குச் செல்கிறார்.
சமீபத்தில் கேரள மாநிலம் சென்று குருவாயூரப்பனை தரிசித்த ஜெயலலிதா, சிறப்புப் பூஜைகளையும், கோவிலுக்கு தான் தானமாக வழங்கியயானைக்கு உணவும் வழங்கினார். இந் நிலையில் நாளை கொல்லூர் மூகாம்பிகை அம்மனைத் தரிசிக்கிறார்.
நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் செல்லும் ஜெயலலிதா அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்லூர்செல்கிறார். ஜெயலலிதாவின் சார்பில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படவுள்ளன. மேலும் சண்டி ஹோமத்துக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
இதை முடித்துக் கொண்டு பெங்களூர் வழியாக ஜெயலலிதா சென்னை திரும்புகிறார். ஜெயலலிதாவின் பெங்களூர் பயணத்தையொட்டிகொல்லூரில் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்படவுள்ளது. ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையினர் ஏற்கனவே கொல்லூர் சென்றுவிட்டனர்.
ஆத்திகவாதியாக இருந்து நாத்திகத்துக்கு மாறி மீண்டும் ஆத்திகவாதியான முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். இந்தக்கோவிலில் அவ்வப்போது வழிபாடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications