மனசாட்சி இல்லாத பள்ளிகள்: ப.சிதம்பரம்
கும்பகோணம்:
மனசாட்சியே இல்லாமல் பலர் தமிழகத்தில் பள்ளிகள் நடத்தி வருவதாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேதனை தெரிவித்தார்.
கும்பகோணம் சென்ற சிதம்பரம் தீ விபத்து நடந்த கிருஷ்ணா பள்ளியை பார்வையிட்டார். பின்னர் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மனசாட்சியே இல்லாமல் பலர் பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பள்ளியாகத்தான் கிருஷ்ணா பள்ளி இருந்துள்ளது.
ஆசிரியர்களை நம்பித்தான் குழந்தைகளை பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். பள்ளிகளை கண்காணிப்பு செய்யும் பணிகளை செய்யக் கூடியவர்கள், கண்காணிப்பது போல நடிக்கிறார்கள்.
அதிகாரிகள் தங்களது கடமையை சரியாக செய்திருந்தால் இந்த கோர விபத்து நடந்திருக்காது. திருச்சி கல்யாண மண்டப விபத்துக்குப் பிறகு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் இதை தவிர்த்திருக்கலாம் என்றார் ப.சிதம்பரம்.
பின்னர் 13 குழந்தைகளைப் பறிகொடுத்த நத்தம் கிராமத்திற்கு சென்ற சிதம்பரம் குழந்கைளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications