அலியின் காவல் ஆக. 13 வரை நீட்டிப்பு
சென்னை:
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் கைதாகியுள்ள முகம்மது அலி, உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி அதிகாரி ராமசாமி ஆகியோரின்காவல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் இந்த மூன்று பேரும் கடந்த 2ம் தேதி கைது செய்யப்பட்டனர். 3 பேரும் சென்னை மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களது காவல் இன்றுடன் முடிவடைந்தது.
இதையடுத்து மூவரும் இன்று எழும்பூர் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது முகம்மது அலி சார்பில்ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையை மட்டுமே சிபிஐ, நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கூடுதல் விசாரணைவிவரம் தாக்கல் செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டினார்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான அனைத்து விவரங்களையும் வரும் ஆகஸ்ட் 13ம் தேதியன்று நீதிமன்றத்தில் தாக்கல்செய்யும்படியும், அன்று வரை 3 பேரின் காவலையும் நீட்டிப்பதாகவும் நீதிபதி அருள் தாஸ் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications