அன்புமணியை தவிக்க விடும் தமிழக அரசு
சென்னை:
தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி அதுல்யா மிஸ்ராவை மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, தனது தனிச் செயலாளராக சென்னை கோட்டையில் பணியாற்றிவரும் அதுல்யாமிஸ்ராவை நியமித்துக் கொள்ள விரும்பினார். இதனையடுத்து மிஸ்ரா டெபுடேஷனில் மத்திய அரசுப் பணியில் பொறுப்பேற்றார்.
அவரை நிரந்தரமாக மத்திய அரசு பணிக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியது. ஆனால் மிஸ்ராவைவிடுவிக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.
மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், மிஸ்ரா விவகாரம் மத்திய மாநில அரசுகளுக்குஇடையேயான விரிசலை அதிகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி:
இந் நிலையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதியையும், நெல்லை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 50இடங்களையும் அகில இந்திய மருத்துவக் கவுன்சில் வழங்கியுள்ளது.
போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதற்காக இந்த மருத்துவக் கல்லூரிகளுக்கு முதலில் அங்கீகாரம் மறுக்கப்பட்டது. பின்னர்திமுக, பா.ம.க., மதிமுக ஆகியவையும் மாநில அரசும், மத்திய அரசை வலியுறுத்தின. இதையடுத்து அகில இந்தியக் கவுன்சில் இரண்டாவதுமுறையாக இந்தக் கல்லூரிகளை ஆய்வு செய்தது.
அதன் பிறகு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications