கிராமங்களை தத்தெடுக்கும் வங்கிகள்
கும்பகோணம்:
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் அதிக குழந்தைகளை இழந்த நத்தம் மற்றும் பெருமாண்டி ஆகிய கிராமங்களைஇந்தியன் வங்கியும், இந்தியன் ஓவல்சீஸ் வங்கியும் தத்து எடுக்கின்றன.
இத் தகவலை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
மேலும் தஞ்சாவூர் மாவட்டத்துக்காக ஆண்டுதோறும் வங்கிகள் ஒதுக்கும் கடனுதவியை ரூ. 440 கோடியில் இருந்துரூ. 600 கோடியாக உயர்த்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதில் 70 சதவீதம் விவசாயப் பணிகளுக்கும் மீது தொகை பிற வளர்ச்சிப் பணிகளுக்கும் அளிக்கப்படவுள்ளன.
மேலும் கும்பகோணம் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எந்த விதமான உதவியையும்வழங்க மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் மூலமாக இது தொடர்பாககோரிக்கைகள் வைக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்து உதவிகள் மற்றும் பிற உதவிகள் வழங்குவதில் கலெக்டர் ராதாகிருஷ்ணன்தலைமையிலான மாவட்ட நிர்வாகம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளது என்றார்.
நத்தம் கிராமத்தைச் சேர்ந்த 13க்கும் அதிகமான குழந்தைகள் விபத்தில் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications