வாடிப்பட்டி: 145 குழந்தைகள் மயக்கம்
Subscribe to Oneindia Tamil
வாடிப்பட்டி:
வாடிப்பட்டி அருகே பள்ளியில் சத்துணவுடன் தரப்பட்ட முட்டைகள் கெட்டுப் போனதால், அதை உண்ட 145குழந்தைகள் மயக்கமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று பிற்பகலில் செம்மணிப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள துவக்கப் பள்ளியில் உணவும் முட்டையும் சாப்பிட்டகுழந்தைகளுக்கு இரவில் வாந்தியும், காய்ச்சலும் ஏற்பட்டது. சில குழந்தைகள் மயங்கி விழுந்தன.
இதையடுத்து அவர்கள் அனைவரும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முட்டைகள் கெட்டுப் போனதால் தான் பிரச்சனைஏற்பட்டதாகக் கருதப்படுகிறது.
இதே போல நெல்லை மாவட்டத்திலும் கெட்டுப் போன முட்டைகள் சாப்பிட்ட பள்ளி மாணவ, மாணவிகள் 18பேர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications