கொல்லூரில் ஜெயலலிதா, சசிகலா வழிபாடு
மங்களூர்:
முதல்வர் ஜெயலலிதாவும் சசிகலாவும் இன்று கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் தரிசனம்செய்தனர்.
சமீபத்தில் மைசூர் சாமுண்டீஸ்வரி ஆலயத்துக்கும், கேரள மாநிலம் சென்று குருவாயூரப்பன் ஆலயத்துக்கும் சென்று சிறப்புப் பூஜைகள்செய்த ஜெயலலிதா, இன்று கொல்லூர் மூகாம்பிகை அம்மனைத் தரிசித்தார்.
சென்னையிலிருந்து இன்று காலை 5.45 மணக்கு சிறப்பு விமானத்தில் மங்களூர் சென்ற ஜெயலலிதாவும் சசிகலாவும் அங்கிருந்துஹெலிகாப்டரில் அரேசூர் என்ற இடத்துக்குச் சென்றனர். அங்கிருந்து கார் மூலம் கொல்லூர் சென்றனர்.
கோவிலில் அவர்களுக்கு பூர்ண கும்ப மரியாதைகள் அளிக்கப்பட்டன. அம்மனுக்கு உகந்த வெள்ளிக்கிழமையான இன்று ஜெயலலிதாவின்சார்பில் மூகாம்பிகை அம்மன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
மேலும் சண்டி ஹோமத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த ஹோமத்துக்காக ஒரு டின் நெய்யை வழங்கிய ஜெயலலிதா, கோவில்அன்னதானத்துக்கு ரூ. 30,000 செலுத்தினார்.
ஜெயலலிதாவின் வருகையையொட்டி அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்.இந்த ஆலயத்துக்கு வழங்கிய தங்க வாளுடன் அம்மன் காட்சியளித்தார்.
கோவில் பிரகாரத்தை சுற்றி வந்த ஜெயலலிதா, அங்கிருந்தபடியே தலைமைச் செயலாளர் லட்சுமி பிரனேஷிடம் பேசினார். அப்போது,சென்னை, கோவை. செலத்தில் இருந்து தினமும் கொல்லூருக்கு பேருந்துகளை இயக்க உத்தரவிட்டார்.
ஜெயலலிதாவின் வருகையின்போது நிருபர்களோ, போட்டோகிராபர்களோ கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. அவரதுபயணத்தையொட்டி கொல்லூரில் கடந்த மூன்று நாட்களாக 150 தமிழக போலீசாரும், கறுப்புப் பூனைப் படையினரும் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தரிசனத்தை முடித்துக் கொண்டு மங்களூர் வழியாக பிற்பகலில் ஜெயலலிதா சென்னை திரும்புகிறார்.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரும் இந்தக் கோவிலில் அவ்வப்போது வழிபாடு நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications