மிஸ் இந்தியா நபீசா ஜோசப் தற்கொலை
மும்பை:
எம்டிவியின் பிரபல வீடியோ ஜாக்கியான நபீசா ஜோசப் (26) தற்கொலை செய்து கொண்டார். 6நாட்களில் திருமணம் நடக்க இருந்த நிலையில், தனது சுரிதாரின் துப்பட்டாவிலேயே அவர் தூக்குமாட்டிக் கொண்டுள்ளார்.
பெங்களூரைச் சேர்ந்த அவர் மியூசிக் டிவியிலும் மாடலிங்கிலும் கொடி கட்டிப் பறந்தார். 1997ம்ஆண்டு மிஸ் இந்தியா பட்டம் பெற்றவர் நபீசா 13 வயது முதலே மாடலிங் செய்து வந்தார்.
மும்பையில் வசித்து வந்த அவர், வெரசோவா- ஜூகூ லிங்க் ரோடு அருகே உள்ள தனது பிளாட்டில்நேற்றிரவு சீலிங் பேனில் தூக்கில் தொங்கினார். இதையடுத்து அவரது வீட்டினர், அவரது உடலைநானாவதி மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர்.
பிரதேப் பரிசோதனைக்காக அங்கிருந்து நபீசாவின் உடல் இன்று காலை கூப்பர்மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே தொழிலதிபர் ஒருவருடன் திருமணமாகி கடந்த ஆண்டு பிரிந்த நபீசா, இன்னொருதொழிலபதிபரை மணமுடிக்க திட்டமிட்டிருந்தார். அடுத்த வாரம் இந்தத் திருமணம் நடக்க இருந்தது.
ஆனால், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமலேயே நபீசாவைத் திருமணம் செய்யஅந்தத் தொழிலதிபர் திட்டமிட்டிருந்ததாகவும், அது தெரியவந்தவுடன் இருவருக்கும் மோதல்ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இதையடுத்து திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டன. இதனால் மனமுடைந்தே நபீசா தற்கொலைசெய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதை அவரது தாயாரும் உறுதி செய்துள்ளார்.
தற்கொலைக்கு சிறிது நேரத்துக்கு முன் வரை தனது தாயார் மற்றும் நண்பர்களுடன் நபீசா பேசிக்கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் தனது அறைக்குச் சென்று அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.