For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 இடங்களில் குண்டு மிரட்டல்: ஈரோட்டில் பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

ஈரோடு:

தமிழர் விடுதலைப் படைத் தலைவர் சுப. இளவரசனை விடுதலை செய்யாவிட்டால் ஈரோடு நீதிமன்றம், ஆட்சித்தலைவர் அலுவலகம் உள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என வந்த தகவலால் ஈரோடுமுழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

தமிழர் விடுதலைப் படைத் தலைவரான சுப. இளவரசன் தமிழக அதிரடிப்படை போலீஸாரால் சில மாதங்களுக்குன்பு கைது செய்யப்பட்டார். தற்போது சென்னை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில், ஈரோடு ரயில் நிலைய மேலாளருக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அதில், சுப. இளவரசனைஉடனடியாக விடுதலை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ரயில் நிலையம், நீதிமன்றம், தலைமை மருத்துவமனைஉள்ளிட்ட 7 இடங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஈரோடு நகர் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர். குண்டு தேடும் வேலையில் நிபுணர்களும் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, பெரம்பலூர் மாவட்டம் துரைமங்கலம் பகுதியில் காவல்துறையினர் மீது வெடிகுண்டு வீசியவழக்கில், சுப. இளவரசன் பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அடுத்தமாதம் 12ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.--

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X