கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தற்கொலை
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் பூச்சி மருந்தைக் குடித்துத் தற்கொலைசெய்து கொண்டார்.
நாகை மாவட்டம் நரசிங்க நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேணுகோபால். கடும் வறட்சி காரணமாககடந்த 3 ஆண்டுகளாக இவர் சரியாக விவசாயம் பார்க்க முடியாமல், ஏகப்பட்ட கடன்களை வாங்கியிருந்தார்.
வாங்கிய கடனை அடைக்க முடியாமல் பரிதவித்து வந்த வேணுகோபால், மாவட்ட ஆட்சித் தலைவரிடம்நிவாரணம் கோரி மனு கொடுக்க முடிவு செய்து பலமுறை முயன்றும் முடியவில்லை.
இந் நிலையில் அவர் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வந்தார். ஆனால் அவரால் ஆட்சியரைசந்திக்க முடியவில்லை. இதையடுத்து தான் கொண்டு வந்திருந்த பூச்சி மருந்தை குடித்து விட்டார். மயக்கமடைந்துவிழுந்த அவரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்தோர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி வேணுகோபால் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications