மாஜி உள்துறைச் செயலாளர் அதிரடி சஸ்பெண்ட்
சென்னை:
முன்னாள் உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா மற்றும் உள்துறை இணைச் செயலாளர் கிருபாகரன் ஆகியஇருவரையும் தமிழக அரசு திடீரென்று தற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.
உள்துறைச் செயலாளராக இருந்து வந்த சையத் முனீர் ஹோதா சமீபத்தில் அந்தப் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டுகாத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கில் டிஐஜி முகம்மது அலி,உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னர் ஹோதா மாற்றப்பட்டார்.
இந் நிலையில் தற்போது அவரை தற்காலிக பணி நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அவருடன்சேர்த்து கிருபாகரனும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைதாகி சிறையில் உள்ள கேரள அரசியல்வாதி அப்துல் நாசர் மதானிக்குஆதரவாக செயல்பட்டதற்காக ஹோதாவும், அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக கிருபாகரனும் பணிநீக்கம்செய்யப்பட்டுள்ளதாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தரப்பில் கூறுகையில், ஹோதா மற்றும் கிருபாகரன் ஆகியோரது நடவடிக்கைகள் குறித்துவிசாரணை நடத்த முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் உத்தரவிட்டார்.
செயற்கைக் கால் மாற்றுவதற்காக தன்னை சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு செயற்கைக் கால் மாற்றுமையத்தில் அனுமதிக்கக் கோரி மதானி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். இதைஎதிர்த்து தமிழக அரசின் சார்பில் குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபி முன்ஸினி பதில் மனு தாக்கல் செய்தார். அந்தமனுவில் மதானிக்கு ஆதரவாக சில அம்சங்கள் சேர்க்கப்பட்டிருந்தன.
ஹோதா மற்றும் கிருபாகரன் ஆகியோரது தலையீடு மற்றும் வலியுறுத்தல் காரணமாகவே இந்த மாற்றங்கள்சேர்க்கப்பட்டுள்ளது தெரிய வந்தது.
அரசிடம் கேட்காமலேயே, மதானியை மருத்துவமனைக்கு மாற்றுவதில் அரசுக்கு ஆட்சேபனை இல்லை என்றுஅந்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோதாதான் இதற்கு முழுக் காரணம்.
இதன் காரணமாக கடந்த பிப்ரவரி 3ம் தேதி மதானிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது. இருப்பினும் மதானிமருத்துவமனையில் சேர ஆர்வம் காட்டவில்லை, மாறாக ஜாமீன் கோரி மனு செய்தார். ஆனால் அந்த மனுவைஉயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது.
இந் நிலையில், கடந்த ஜூன் 18ம் தேதி முனீர் ஹோதா தன்னிச்சையாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.அதாவது, கோவை மத்திய சிறைக்குள் மட்டுமே மதானி இருக்க வேண்டும், வேறு எங்கும் வைக்கப்படக் கூடாதுஎன்ற முந்தைய அரசு உத்தரவை ரத்து செய்து புதிய உத்தரவை ஹோதா பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவு குறித்தும் முதல்வரிடம் அவர் ஆலோசிக்கவில்லை என்று தெரிகிறது. தன்னிச்சையாக உத்தரவுபிறப்பித்துள்ளார். இதன் மூலம் மதானியை சென்னைக்குக் கொண்டு வருவதற்கும் அவர் முயற்சித்துள்ளது தெரியவந்தது.
ஹோதாவின் உத்தரவை நிறுத்தி வைத்த முதல்வர் ஜெயலலிதா மதானி விவகாரம் தொடர்பாக முழுமையானவிசாரணைக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து ஹோதாவின் செயல்பாடுகள் வெட்ட வெளிச்சமாகவே அவரைபணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் என்று அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மதானி தவிர, போலி முத்திரைத் தாள் விவகார வழக்குகள் குறித்தும் ஜெயலலிதாவுக்கு ஹோதா சரியானதகவலைத் தரவில்லை என்றும் கூறப்படுகிறது. போலி முத்திரைத் தாள் விவகாரம் இவ்வளவு பெரிய பூகம்பமாகவெடிக்கும் என்று முதல்வருக்கு எச்சரிக்காத ஹோதா, முகம்மது அலி உள்ளிட்டோர் மீதான வழக்குகள் குறித்தவிவரத்தையும் ஜெயலலிதாவிடம் சரியாக தெரிவிக்கத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும் போலி முத்திரைத் தாள் மோசடி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கத் தேவையில்லை என்று ஹோதா,ஜெயலலிதாவுக்கு எடுத்துக் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இந்த முத்திரைத் தாள் விவகாரத்தில் ஹோதாவுக்கும் ஏதாவது தொடர்பிருக்கலாம் என்றும் சந்தேகம்கிளம்பியுள்ளது.
இந் நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவரையும் சிபிஐ விசாரிக்க வாய்ப்புள்ளதாகத்தெரிகிறது.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications