புதிய கடற்படை தளபதி அருண் பிரகாஷ்
டெல்லி:
இந்தியாவுக்கு அணு சக்தி நீர் மூழ்கிகள் மிக அவசியம் என புதிய கடற்படைத் தளபதியாகப்பொறுப்பேற்றுள்ள அருண் பிரகாஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
கடற்படைத் தளபதியாக இருந்த மானவேந்திர சிங் ஓய்வு பெற்றுள்ள நிலையில், நாட்டின் 20வதுகடற்படைத் தலைவராக அருண் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடற்படையின் போர் விமான பைலட்டாக இருந்து, இப்போது தளபதியாகியுள்ள அருண், 1971ம்ஆண்டு நடந்த இந்திய-பாகிஸ்தான் போரில் சிறப்பாக பணியாற்றியதற்காக வீர் சக்ரா விருதும்பெற்றவராவார்.
பதவியேற்ற பின் பேசிய அவர்,
நமக்கு அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கிகள் மிக, மிக அவசியம். ஆனால், இது குறித்த முடிவைஎடுக்க வேண்டியது அரசு தான். கடற்படையின் பலம் குறைந்து கொண்டே வருகிறது. இதைஉடனடியாகத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
இப்போதுள்ள போர்க் கப்பல்கள், நீர் மூழ்கிகளை முறையாகப் பராமரிப்பதற்கு முக்கியத்துவம்கொடுப்பேன். அதே நேரத்தில் புதிய போர்க் கப்பல்களை படையில் சேர்க்கவும், நீர் மூழ்கிகளைஇறக்குமதி செய்யவும் முயற்சி எடுப்பேன்.
கருவிகளுக்கும் ஆட்களுக்கும் கடற்படையில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதைப் போக்க உரியமுயற்சி எடுப்பேன்.
நாட்டின் பல பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள நீண்ட தூரம் சென்று தாக்கும்ஏவுகணைகள், ரேடார்கள், சென்சார்களுடன் கடற்படைக் கப்பல்களை நெட்வோர்க் செய்யநடவடிக்கை எடுப்பேன். செயற்கைக் கோள்கள் உதவியுடன் இந்த நவீன கம்ப்யூட்டர் நெட்வோர்க்உருவாக்கப்படும்.
இதன்மூலம் கடற்படையின் தாக்குதல் திறன் பல மடங்கு அதிகரிக்கப்படும். அதே நேரத்தில் கண்ணிவெடிகளைக் கண்டறியும் கப்பல்கள், நவீன நீர்மூழ்கிகள், கண்காணிப்புப் படகுகள் ஆகியவையும்அதிக அளவில் வாங்கப்பட வேண்டும்.
விமானம் தாங்கிக் கப்பலான அட்மிரல் கிராஸ்க்காவ் விரைவில் ரஷ்யாவிலிருந்து இந்தியகடற்படையிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.
பதவியேற்புக்கு முன்னதாக, அமர்ஜவான் ஜோதிக்குச் சென்று போரில் வீர மரணம் அடைந்தவீரர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அருணுக்கு முப்படைகளின்அணி வகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
கடற்படையின் கிழக்கு மண்டலப் பிரிவின் தலைவராகவும், அந்தமான்-நிகோபார் தீவுகளின்கடற்படைப் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ள அருண், மேற்கு மண்டல கடற்படையின்கமாண்டராகவும் இருந்தவராவார்.
ரஷ்யாவிடம் இருந்து இரு அகுலா ரக அணு நீர் மூழ்கிகளை வாங்கவும், பிரான்சிடம் இருந்துஸ்கார்பீன் ரக ஹண்டர் நீர்மூழ்கிகளை வாங்கவும் இந்தியா பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications