கோ ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு விஆர்எஸ்
சென்னை:
கோ-ஆப்டெக்ஸ் நிறுவன ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிமுகப்படுத்த தமிழக அரசுதிட்டமிட்டுள்ளது.
சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட ஜவுளித் துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
போலீஸ் உள்ளிட்ட அரசுத் துறைகளுக்குத் தேவையான சீருடைத் துணிகளை வழங்க ரூ.8.62 லட்சம் மதிப்பில் 20லட்சம் மீட்டர் துறைகளை உற்பத்தி செய்ய தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. அரசுதிட்டங்களுக்குத் தேவைப்படும் வெள்ளை நிறத் துணியை ரூ.15.92 கோடி மதிப்பில் விசைத்தறி நெசவாளர்கூட்டுறவு சங்கங்களிடம் இருந்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் 365 புதிய ஆடை வடிவங்கள் அறிமுகப்படுத்தப்படும். மேலும் இந் நிறுவனத்தில்பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இயைைடுத்து கைத்தறித்துறை அமைச்சர் சோமசுந்தரம் பேசியதாவது:
சென்னைக்கு அருகே இருங்காட்டுக் கோட்டை, மதுரைக்கு அருகே நிலக்கோட்டை மற்றும் திருப்பூரில் ஆயத்தஆடைப் பூங்கா அமைக்கப்படும். மேலும் கோவை மாவட்டம் பல்லாடம், நாமக்கல் மாவட்டம் கொமாரபாளைம்,ஆண்டிபட்டி மற்றும் ஈரோடு ஆகியவற்றில் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் நெசவுப் பூங்கா அமைக்கநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வரும் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2.22 கோடி பேருக்கு ரூ.173 கோடி ரூபாய் செலவில் இலவச வேட்டி சேலைகள்வழங்கப்படும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications