மீண்டும், குழந்தைகளை புதைத்து நேர்த்திக் கடன் !
சிவகாசி:
தமிழக அரசின் தடையையும் மீறி, விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே கோட்டைப்பட்டிகிராமத்தில் குழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி வெகு விமரிசையாகநடந்தது.
2 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரை அருகே பேரையூர் கிராமத்தில், கோவில் திருவிழாவில் அமைச்சர் துரைராஜ்முன்னிலையில், குழந்தைகளை உயிருடன் புதைத்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சை காரணமாக அமைச்சர் பதவியை பறிகொடுத்தார் துரைராஜ். இந்த சம்பவத்தைத் தொடர்ந்துகுழந்தைகளை உயிருடன் மண்ணில் புதைத்து நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு தமிழக அரசு தடை விதித்தது.
இந் நிலையில், விருதுநகர் மாவட்டம் கோட்டைப்பட்டி கிராமத்தில் நடந்த முத்தாளம்மன் கோவில் திருவிழாவில்,குழந்தைகளை உயிருடன் புதைத்து நேர்த்திக் கடன் செலுத்தப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் முத்தாளம்மன் கோவிலில் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தஆண்டு விழாவில் புதன் மற்றும் வியாழன் ஆகிய இரு நாட்களிலும் குழந்தைகளை மண்ணில் புதைத்து பக்தர்கள்நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளனர்.
கோவில் முன்பு ஆறு அடி ஆழத்திற்கு நீளமான குழிகள் தோண்டப்பட்டு அதில் வேப்பிலைகள் போடப்பட்டன.குழிக்குள் புதைக்கப்பட வேண்டிய குழந்தைகளை மஞ்சள் துணியால் சுற்றி அக்குழந்தைகளை குழிக்குள்பெற்றோர் வைத்தனர். பின்னர் குழி மூடப்பட்டது.
இதையடுத்து கோவில் பூசாரி, மண்ணால் ஆன அம்மன் சிலையுடன் குழியின் மீது நடந்து சென்றார். அதைத்தொடர்ந்து குழி திறக்கப்பட்டு குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக எந்த விபரீதமும்நடைபெறவில்லை.
இந்த சம்பவம் குறித்துத் தனக்கு எதுவும் தெரியாது, அந்த சமயத்தில் தான் விடுப்பில் சென்றிருந்ததாக மாவட்டஆட்சித் தலைவர் முகம்மது அஸ்லம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications