9ம் தேதி கலெக்டர்கள், அதிகாரிகள் மாநாடு
சென்னை:
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டதாக எதிர்க் கட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் வரும்9, 10ம் தேதிகளில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டை முதல்வர் ஜெயலலிதா கூட்டியுள்ளார்.
வருடந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாட்டை முதல்வர்நடத்துவது வழக்கம். இந்தாண்டுக்கான மாநாடை நடத்த கடந்த மாதமே திட்டமிடப்பட்டது. சட்டசபைத் தொடர்தொடங்கவிருந்ததால், அது தள்ளிப் போடப்பட்டது.
நேற்று சட்டசபைக் கூட்டத் தொடர் முடிவுற்றதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் மாநாடு நடத்தப்படுகிறது. வரும் 9,10 தேதிகளில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் இம்மாநாடுநடைபெறுகிறது.
9ம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்தில் வளர்ச்சித் திட்டங்கள், மற்றும் சட்டம், ஒழுங்கு நிலை ஆகியவை குறித்து முக்கியமானவிவாதிக்கப்படவுள்ளது.
மாலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளும்கூட்டம் நடைபெறுகிறது. 10ம் தேதி காலையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுகிறது.அப்போது சிறப்பாக பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் பரிசு வழங்குகிறார்.












Click it and Unblock the Notifications