மதுரை உயர் நீதிமன்றத்துக்கு கூடுதல் பஸ்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் உள்ள உயர் நீதிமன்றக் கிளைக்கு கூடுதல் பஸ்கள் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றுசட்டசபையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஸ்வநாதன் கூறினார்.
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏக்கள் மேலூர் சாமி, மாணிக்கராஜ், சந்திரசேகரன்ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்து அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது:
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு கூடுதல் பஸ்கள் விட உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வேலூர் மாவட்டம்வள்ளிமலை சுப்ரமணியசாமி கோயில் பெளர்ணமி கிரிவலத்துக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக கூடுதல்பஸ்கள் இயக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மேலும் பல புதிய பஸ்களை விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications