முஸ்லீம்கள் இட ஒதுக்கீடு: கருணாநிதி ஆதரவு
சென்னை:
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடே வழங்கக் கூடாது என்று கூறும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சரியான பதிலைத் தரவேண்டிய கட்டாயம் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக முஸ்லீம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு பாராட்டுவிழா சென்னையில் நடந்தது. இதில் திமுக தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக அவைத்தலைவர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் செயலாளர் நல்லகண்ணு உள்ளிட்டோர் கலந்து காண்டனர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கி ஆந்திர மாநில அரசு முன்மாதிரியாகதிகழ்ந்துள்ளது. ஆனால் அதை இங்குள்ள ஜெயலலிதாவும், பாஜகவினரும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மாட்டேன் என்று ஜெயலலிதா கூறினாலும் பரவாயில்லை, ஆனால், யாரும்இட ஒதுக்கீடே வழங்கக் கூடாது என்று அவர் முழங்குகிறார்.
இதற்கு சரியான பதிலைத் தர வேண்டிய கட்டாயம் முஸ்லீம் சிறுபான்மை சமுதாயத்தினருக்கு உள்ளது.
40 தொகுதிகளும் நமக்கே என்று மக்களவைத் தேர்தலில் முழங்கினோம். உடனேயே பல சலுகைகளை வாரிவழங்கினார் ஜெயலலிதா. அதேபோல, 234 சட்டசபைத் தொகுதிகளும் நமக்கே என்று முழங்கினால்தான்,முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்கும் போலத் தோன்றுகிறது என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications