மீண்டும் நியூயார்க்கை தாக்க அல்கொய்தா திட்டம்
நியூயார்க்:
நியூயாக்கில் அல்-கொய்தா தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தலாம் என உளவுப் பிரிவினர்எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அந் நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள தோடு,தீவிர கண்காணிப்பும் அமலாக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கின் வர்த்தகப் பகுதிகள், பெரிய கட்டடங்கள் மீது இந்தக் தாக்குதல் நடத்தப்படலாம் எனநியூயார்க் நகர போலீசார் எச்சரித்துள்ளது. இதனால் நகரின் முக்கிய கட்டடங்களில் தீவிரசோதனைகளுக்குப் பிறகே பொது மக்கள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனங்களுடன் வந்து மோதி தாக்குதல் நடத்தவும்வாய்ப்பிருப்பதாக உளவுப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். அதே போல ரசாயன ஆயுதத் தாக்குதலும்நடக்கலாம் என்றும், அதை சமாளிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றுமாறும்அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மெக்சிகோ வழியாக அல்கொய்தா தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் அமெரிக்காவுக்குள் நுழையமுயன்று வருவதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications