புதிய வெளியுறவு செயலாளர் ஷியாம் சரண்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறைச் செயலாளராக ஷியாம் சரண் இன்று பதவியேற்றுக்கொண்டார். இதுவரை நேபாள நாட்டுத் தூதராக இருந்த ஷியாம், ஓய்வு பெற்றுச் செல்லும்வெளியுறவுத்துறைச் செயலாளர் சஷாங்கிடம் இருந்து இப் பதவியை ஏற்றார்.

57 வயதான ஷியாம் சரண், 1970ம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரியானவர்.

இராக்கில் தீவிரவாதிகள் பிடியில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழுவில் உறுப்பினராக உள்ள சரண், பல வெளியுறவு விவகாரங்களில் முடிவெடுப்பதில்மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்து வருபவர்.

இந்தியா-பாகிஸ்தான் இடையிலான வெளியுறவுத்துறை அதிகாரிகள் மட்டத்திலானபேச்சுவார்த்தைகளில் பலமுறை பங்கேற்றவர். மொரீஷியஸ், மியான்மார், இந்தோனேஷியாநாடுகளின் தூதுவராக இருந்தவர் சரண், சார்க் கூட்டமைப்பில் முக்கிய பங்காற்றியவர்.

ஹாங்காங், பெய்ஜிங், ஜெனீவா, டோக்கியோவில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணிபுரிந்தஅனுபவம் கொண்ட சரண், ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்புப் பிரிவில் ஆராய்ச்சிப்பட்டம் பெற்றவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+