திருப்பதியில் குடிமகன்களுக்கு தடை
திருப்பதி:
மது அருந்தியவர்கள் திருப்பதி திருமலைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் மது, இறைச்சி, சிகரெட், குட்கா, பான்பராக் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. இருப்பினும்திருமலையில் குடிபோதையில் கலாட்டா செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.திருமலையில் வசிக்கும் சிலர் திருப்பதிக்கு வந்து மது அருந்தி விட்டு திருமலைக்கு செல்வதாகதேவஸ்தானத்துக்குத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் திருமலை அடிவாரமான அலிபிரி அருகில் திருமலைக்குசெல்பவர்களை ஒரு நாள் பரிசோதித்தனர். அப்போது ஏறத்தாழ 100 பேர் மது அருந்தி விட்டு திருமலைக்கு செல்லமுயன்றது கண்டு பிடிக்கப்பட்டது.
இவர்களில் பெரும்பாலானவர்கள் தேவஸ்தான ஊழியர்கள், அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் மற்றும்திருமலையில் வசிக்கும் உள்ளூர்வாசிகள் என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து இனி தினமும் அலிபிரி அருகில் "பிரீத் அனலைசர்" கருவியால் அனைவரையும் பரிசோதித்தபிறகே திருமலைக்கு செல்ல அனுமதிப்பது என்றும், குடித்து விட்டு பிடிபடும் திருமலைவாசிகளுக்கு ஒருமுறைஅபராதம் மட்டும் விதிப்பது; மீண்டும் தொடர்ந்து குடித்து விட்டு வந்தால் அவர்களை திருமலையில் இருந்துநிரந்தரமாக வெளியேற்றி விடுவது என்றும் முடிவு செய்துள்ளனர்.