பள்ளிகளை -மம்-ப-டுத்-த இந்தியன் வங்கி நிதியுதவி
சென்னை:
கும்பகோணம் தீ விபத்தை அடுத்து பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கு நிதியுதவிஅளிக்க இந்தியன் வங்கி முன்வந்துள்ளது.
கும்பகோணம் தீ விபத்தில் அதிக அளவில் குழந்தைகளை இழந்த நத்தம் மற்றும் இன்னொரு கிராமத்தை இந்தியன்வங்கியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் தத்தெடுக்கும் என நிதியமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்தியன் வங்கி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு உதவ புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கும்பகோணம் தீவிபத்தைத் தொடர்ந்து இந்தியன் வங்கி வித்யா மந்திர் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது.தமிழகம் முழுவதும் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்த இத் திட்டத்தின் மூலம் குறைந்த வட்டிவிகிதத்தில் கடன் வழங்கப்படும்.
இத் திட்டத்ன் கீழ் ரூ.2 லட்சம் வரை வட்டியில்லாக் கடனும், அதற்கு மேலான கடன் மதிப்புக்கு 7.75 சதவீதம் முதல்10 சதவீதம் வரை வட்டியுடனான கடனும் வழங்கப்படும். அதிகபட்சமாக இத் திட்டத்தில் ரூ.10 லட்சம் வரை கடன்வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications