"நியூ" படத்துக்கு பெண் எம்.எல்.ஏ. கடும் எதிர்ப்பு
சென்னை:
பெண்களைக் கேவலமாகவும், இழிவாகவும், மோசமான கண்ணோட்டத்துடனும் சித்தரித்து நியூ படத்தைஎடுத்துள்ளார் என்று இயக்குநர் எஸ்.ஜே.சூர்யாவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் எம்.எல்.ஏ.பாலபாரதி கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர் கூறுகையில், நியூ படத்தில் பச்சை பச்சையான வசனங்கள், ஆபாச காட்சிகளுக்குப் பஞ்சம் இல்லை.பெண்களை செக்சுக்கு அலைபவர்களாக அவர் சித்தரித்துள்ளார்.
எட்டு வயதுப் பையன் என்னவெல்லாம் பேசக் கூடாதோ அதையெல்லாம் இந்தப் படத்தில் பேச வைத்துள்ளார்கள்.நீ அப்பாவாகி விட்டாய் என்று 8 வயது சிறுவனிடம் ஒரு நர்ஸ் சொல்வது போல காட்சி வைத்துள்ளார்கள். இதன்மூலம் சிறுவர்களையும் கெடுக்கிறார்கள்.
பெண்கள் புடவை கட்டுவதால்தான் மக்கள் தொகை பெருகி விட்டதாக ஒரு வசனம் வருகிறது. இதெல்லாம்பெண்களை மிகவும் கேவலப்படுத்துவது போல உள்ளது.
தமிழர்களின் கலாச்சாரமான சேலையை கவர்ச்சி பொருளாக சித்தரித்துள்ளார் சூர்யா. இந்தப் படம் தமிழ்க்கலாச்சாரத்திற்கு சற்றும் பொருத்தமில்லாத, கலாச்சாரத்தை கேவலப்படுத்தும் படம் என்று குமுறுகிறார் பாலபாரதி.
படம் வெளியாகி மூன்று –வாரங்கள் –ஆன நிலையில், சூர்யா புதிதாக ஒரு பாடலைச் சேர்த்துள்ளார். கிரண் வரும்காட்சிகளுக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு இருப்பதாக வந்த செய்திகளால் இப்போது அவருக்கு தனியாகஒரு பாட்டை செருகியுள்ளார்.
மார்க்கண்டேயா நீ வருவாயா என்ற இந்தப் பாடல், படம் வெளியான போது கிரண் காட்சிகளில் பின்னணிஇசைக்கு உபயோகப்படுத்தப்பட்டது. இப்போது படத்தின் டெம்ப்டேஷனைக் கூட்டுவதற்கு கிரணை தேவையானஅளவுக்கு உரித்து, இந்த பாடலை ரூ.25 லட்சம் செலவில் படமாக்கியுள்ளார் சூர்யா.
ஆனால் இந்தப் பாடல் காட்சிக்கு அனுமதி அளிக்க சென்ஸார் போர்டு மறுத்து விட்டது. இதையடுத்து சூர்யாரிவைசிங் கமிட்டிக்கு மேல் முறையீடு செய்ய மும்பை சென்றுள்ளார்.