For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மீண்டும் வருகிறது பான் மசாலா

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பான் மசாலா, குட்கா ஆகியவற்றை விற்பனை செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை உச்ச நீதிமன்றம்ரத்து செய்துவிட்டதால், தமிழகத்தில் மீண்டும பான்பராக் உள்ளிட்டவற்றின் விற்பனைதொடங்கவுள்ளது.

மகாராஷ்டிரம், ஆந்திரா, கோவாவைத் தொடர்ந்து தமிழகமும் பான் மசாலா விற்பனைக்குத் தடைவிதித்தது.

இதை எதிர்த்து பான்பராக் உள்ளிட்ட குட்கா விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்தஉச்ச நீதிமன்றம் தடையை நீக்கி தீர்ப்பளித்துள்ளது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் பாலகிருஷ்ணன், ஸ்ரீகிருஷ்ணா ஆகியோர், பான் மசாலா, குட்காவுக்குமாநில அரசுகள் நிரந்தமாகத் தடை விதிக்க முடியாது என அறிவித்ததோடு, இந்தத் தடை அரசியல்சட்டத்துக்கு விரோதமானது என்றும் அறிவித்தனர்.

இந்தத் தடையை மத்திய அரசு மட்டுமே விதிக்க முடியும் என்றும் அவர்கள் கூறினர்.

இதனால் தமிழகத்தில் மீண்டும் பான்பராக் உள்ளிட்ட வஸ்துக்களின் விற்பனை மீண்டும்தொடங்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X