ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

ரூ. 5,000 லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளரை ஊழல் தடுப்புப் போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு தாமரைக்குளம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் ராபின்சன்.இவர் சமீபத்தில்தான் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்திலிருந்து இங்கு மாறுதலாகி வந்தார்.

இந் நிலையில் அந்தப் பகுதியில் மருந்துக் கடை வைத்திருக்கும் பரமார்த்திலிங்கம் என்பவரை அணுகி, உன்மேல்நிறைய புகார்கள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டுமானால் ரூ. 20,000 கொடுக்க வேண்டும். 10நாட்களுக்குள் பணத்தைக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் போதை மருந்து வழக்கில் உள்ளே தள்ளி விடுவேன்என ஆய்வாளர் மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து ஊழல் தடுப்புப் போலீஸில் பரமார்த்தலிங்கம் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீஸார்பரமார்த்தலிங்கத்திடம் வேதிப் பொருள் தடவிய 5,000 ரூபாய்க்கான நோட்டுக்களைக் கொடுத்தனுப்பினர்.

அந்த ரூபாய் நோட்டுக்களை ராபின்சனிடம் பரமார்த்தலிங்கம் கொடுத்தார். அப்போது அவரை கையும் களவுமாகபோலீஸார் பிடித்து கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+