For Daily Alerts
Just In
தஞ்சை பள்ளிக்கு வந்த வெடிகுண்டு புரளி
தஞ்சாவூர் :
தஞ்சாவூரில் உள்ள ஒரு பள்ளிக்கு இன்று வெடிகுண்டு புரளி வந்ததையடுத்து அந்த பள்ளிக்கு விடுமுறைஅளிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில நகரங்களில் உள்ள பள்ளிகளுக்குவெடிகுண்டு புரளி வந்தது. இதனைடுத்து பல பள்ளிகளுக்கு பெற்றோர்கள் அவசர அவசரமாக வந்து,குழந்தைகளை அழைத்துச் சென்றனர். இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந் நிலையில் தஞ்சாவூரில் உள்ள சுந்தரனார் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியருக்கு மணிக்கு பள்ளியில்வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசி மூலம் இன்று தகவல் வந்தது. இதையடுத்து பள்ளிக்கு விடுமுறைஅளிக்கப்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கு வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு ஏதும்கிடைக்கவில்லை. தொலைபேசியில் ஒரு பெண் பேசியதாக பள்ளித் தலைமையாசிரியர் தெரிவித்தார்.
Comments
Story first published: Tuesday, August 3, 2004, 5:30 [IST]