For Daily Alerts
Just In
உலக அமைதிக்காக விஜிபியின் 6 கிமீ நீள கடிதம் !
சென்னை:
உலக அமைதியை வலியுறுத்தி வி.ஜி.பி. நிறுவனங்களின் சார்பில் 6 கிலோமீட்டர் நீளத்திற்கு கடிதம்தயாரிக்கப்பட்டு அதில் பிரபலங்கள் உள்பட, லட்சக்கணக்கான பொது மக்கள் கையெழுத்திடவுள்ளனர்.
உலக அமைதி நிலவ வேண்டும், மோதல்கள் ஒழிய வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 கிலோ மீட்டர் நீளத்திற்குக்கடிதம் ஒன்றை விஜிபி நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இதில் 1 லட்சம் பேரின் கையெழுத்தை சேகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்தக் கடிதம் சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி உலக அமைதிக் கோவிலில்வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் இதில் கையெழுத்து பெறப்படவுள்ளது. தொடக்க நாளில் காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கலந்து கொண்டு கையெழுத்திடுகிறார்.
1 லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் கையெழுத்தைப் பெற்று அக் கடிதத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு அந்தநிறுவனம் அனுப்பி வைக்கவுள்ளது.
Comments
Story first published: Wednesday, August 4, 2004, 5:30 [IST]