இந்தோனேஷியா: இந்தியருக்கு மரண தண்டனை
ஜகார்தா:
இந்தோனேஷியாவில் போதை மருந்து கடத்தியதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியர்,இன்று போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டாார்.
1994ம் ஆண்டு 12 கிலோ ஹெராயின் கடத்தியதாக இந்தியாவைச் சேர்ந்த அயோத்ய பிரசாத்செளபே என்பவர் சுமத்ரா தீவுகளில் உள்ள மெடான் நகர விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.
இவருக்கும் உடன் கைது செய்யப்பட்ட இரு தாய்லாந்து நாட்டினருக்கும் 1996ம் ஆண்டில் மரணதண்டனை வழங்கியது இந்தோனேஷிய நீதிமன்றம்.
இவர்களை மன்னித்து, தண்டனையைக் குறைக்குமாறு இந்தியத் தூதரகமும், லண்டனில் உள்ள மனிதஉரிமை அமைப்புகளும் இந்தோனேஷிய அரசுக்கு கோரிக்கைகள் விடுத்திருந்தன.
மேலும் செளபே மீதான வழக்கு விசாரணை நியாயப்படி நடக்கவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.இந் நிலையில் இன்று செளபேயின் மரண தண்டனையை இந்தோனேஷியா நிறைவேற்றியது.
உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 2 மணியளவில், 10 மீட்டர் தூரத்தில் இருந்து போலீசாரால்துப்பாக்கியால் இதயத்தில் சுடப்பட்டு செளபே கொல்லப்பட்டார். 2001ம் ஆண்டுக்குப் பின் அந்நாட்டில் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவாகும்.
கொல்லப்பட்ட செளபே இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டார்.
செளபேயுடன் கைது செய்யப்பட்ட, தாய்லாந்தைச் சேர்ந்த மற்ற இருவரும் இதே போன்றமரணத்தை எதிர்நோக்கி காத்துள்ளனர்.
அதே போல மேலும் பல போதைக் கடத்தல் வழக்குகளில் சிக்கிய 65 பேருக்கும்இந்தோனேஷியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள்ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.












Click it and Unblock the Notifications