இலங்கை: 8 ராமேஸ்வரம் மீனவர்கள் மீட்பு

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கை மீனவர்களால் பிடித்துச் செல்லப்பட்டு நடுக் கடலில் தவிக்க விட்டுச் செல்லப்பட்ட 8 ராமேஸ்வரம்மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த புவனேந்திரன் என்பவருக்குச் சொந்தமான 2 படகுகளில் 8 மீனவர்கள் மீன் பிடிக்கச்சென்றனர். அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, 20க்கும் மேற்பட்ட படகுகளில் இலங்கை மீனவர்கள்தமிழக மீனவர்களை தாக்கினர்.

பின்னர் தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் மூழ்கடித்து விட்டு அவர்களை பிடித்துச் சென்றனர். பேச்சாலைஎன்ற பகுதியில் கடல் திட்டுக்களில் தமிழக மீனவர்களை விட்டு விட்டுச் சென்றனர்.

நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 8 பேரையும் இந்திய கடலோரக் காவல் படை மீட்டு கரைக்குக் கொண்டுவந்தது.

நாகை மீனவர்கள் கதி?:

அதே போல நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்கள் செவ்வாய்க்கிழமையன்றுகடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்றுள்ளனர்.

இதனால் நாகை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள்விரைவான நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால் பெரும் போராட்டத்தில் குதிப்போம் என மீனவர் அமைப்பின்பிரதிநிதியான மங்கையர்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+