For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவர்கள் மீது தடியடி: மார்க்சிஸ்ட் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Studentsதவறான கல்விக் கொள்கைகளைக் கண்டித்து ஊர்வலம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார்நடத்திய கண்மூடித்தனமான தாக்குலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.

அக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் என். வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் தமிழகத்தில் நிலவும் தவறான கல்விக் கொள்கையைக்கண்டித்தும், பல கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜனநாயக முறையில், அமைதியாக போராட்டம்நடத்தி தமிழக கல்வித்துறை இயக்குனரிடம் மனு கொடுக்கச் சென்ற மாணவர்கள் மீது போலீசார்கண்மூடித்தனமான தடிதடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதலில் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.செல்வா உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த மாணவர்களைக் கைது செய்து காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்று போலீசார் மிகக்கடுமையான தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்கையும் போட்டுள்ளார்கள்.

போலீசாரின் இந்த அராஜக செயலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது. கொடூரதாக்குதல் நடத்திய போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழகஅரசையும் காவல் துறையையும் கேட்டுக் கொள்கிறோம்.

அதே போல மாணவர்கள் மீதான பொய் வழக்குகளையும் உடனடியாக வாப் பெற்று, தடியடியில்படுகாயமடைந்த மாணவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கோரியுள்ளார் வரதராஜன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X