கோவில்பட்டி நோக்கி வைகோ நடைபயணம்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

Vaiko
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது நடைபயணத்தின் 3வது நாளான இன்று தூத்துக்குடி மாவட்டம்வில்லிச்சேரியிலிருந்து கோவில்பட்டி நோக்கி நிடக்கத் தொடங்கியுள்ளார்.

நெல்லையிலிருந்து சென்னை நோக்கி 3,000 தொண்டர்களுடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள வைகோ,2வது நாளான நேற்று மாலை அவர் கயத்தாறு வந்து சேர்ந்தார். அங்கு வீரபாண்டிய கட்டபொம்மன்நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

Vaikoபின்னர் இன்று காலை அவர் வில்லிச்சேரி வந்து சேர்ந்தார். அங்கு ஏராளமாகத் திரண்டிருந்த பொது மக்களிடையேபேசிய வைகோ பிற்பகலில் மீண்டும் நடை பயணத்தைத் தொடங்கினார்.

இன்றிரவு கோவில்பட்டி வந்து சேரும் வைகோ அங்கு பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். வைகோ செல்லும்வழியெங்கும் பொது மக்களும், மதிமுகவினரும் ஏராளமான அளவில் திரண்டு நின்று வாழ்த்துதெரிவித்தவண்ணம் உள்ளனர்.

பல பொது மக்கள் அவரிடம் மனுக்களையும் கொடுத்து வருகின்றனர்.

தன்னுடன் வரும் தொண்டர்களுடன் ஒரே இடத்தில் உறங்கி, அவர்களுடனனேயே உண்டு, அவர்களுடன்பேசியபடியே தனது நடை பயணத்தை மேற்கொண்டு வருகிறார் வைகோ. காலையில் நடை பயணம் தொடங்குமுன் வைகோ தலைமையில் தொண்டர்கள் திராவிட இயக்க உறுதிமொழி எடுத்து கொள்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+