For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

6 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்ட மூதாட்டி

By Staff
Google Oneindia Tamil News

சிவகாசி:

சிவகாசியைச் சேர்ந்த மூதாட்டியைக் கடத்திச் சென்று அவரது ரூ. 4 லட்சம் சொத்துக்களை மிரட்டி வாங்கி, கடந்த 6ஆண்டுகளாக கிட்டங்கியில் அடைத்து வைத்திருந்த 4 பேரை போலீஸார் கைது செய்து, மூதாட்டியையும் மீட்டனர்.

விருது-நகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சாட்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிரகத்தாய். இவருக்கு -ரூ. 4லட்சத்-துக்-கு சொத்துக்கள் உள்ளன. இந் -நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு -முன்பு கிரகத்தாய் கடத்தப்பட்டார்.

அவர் குறித்து எந்தத் தகவலும் இல்லாமல் இருந்து வந்தது. இந் -நிலையில் கிரகத்தாய் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளஒரு கிட்டங்கியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக அவரது உறவினர்களுக்குத் தெரியவந்தது. இதையடுத்துபோலீஸில் அவர்கள் தெ-ரிவித்தனர்.

போலீஸார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட கிட்டங்கியில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கிரகத்தாயை மீட்டனர்.அவரை கிட்டங்கியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திய 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

கிரகத்தா-யி-ன் சொத்துக்க-ளைப் பறிப்பதற்காகவே அ-வ-ரை அந்த நிபர்கள் கடத்திச் சென்று சிறை வைத்துள்ளனர்.கிரகத்தாயை மிரட்டி கையெழுத்து வாங்கி அவரது சொத்துக்களை இந்தக் கும்பல் விற்றுவிட்டது.

கைதான 3 பேரும் முன்னாள் ஸ்ரீவில்லிபுத்தார் எம்.எல்.ஏ தாமரைக்கனியின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X