கும்பகோணம்: விசாரணை விரைவில் தொடக்கம்
கும்பகோணம்:-
கும்பகோணம் தீவிபத்து தொடர்பான தனது விசாரணையை நீதிபதி சம்பத் ஓரிரு வாரங்களில் தொடங்கவுள்ளார்.
கும்பகோணம் சரஸ்வதி தொடக்கப் பள்ளியில் கடந்த 16ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள்பலியானார்கள். இது தொடர்பாக பள்ளி தாளாளர், கல்வி அதிகாரிகள் உள்பட 18 பேர் கைது செய்யப்பட்டுசிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சம்பத் தலைமையில் ஒருவிசாரணை கமிஷனை முதல்வர் ஜெயலலிதா கடந்த 19ம் தேதி நியமித்தார்.
இந் நிலையில் கும்பகோணம் சென்ற நீதிபதி சம்பத், தீவிபத்து நடந்த பள்ளியை பார்வையிட்டார். பின்னர்கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 12 குழந்தைகளைப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தீவிபத்துக்கான காரணத்தை விசாரணை மூலம் தெளிவுபடுத்த முஐயும். சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் ஆகியஇடங்களில் விசாரணை நடைபெறும், ஓரிரு வாரங்களில் விசாரணை தொடங்கும் என்று கூறினார்.
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்தும், எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து நடைபெறாமல்இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்து நீதிபதி சம்பத் 4 மாதத்திற்குள்தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வார்.












Click it and Unblock the Notifications