ஜெ. ஆட்சி தானாகவே கலையும்: ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை நாங்கள் கலைக்க வேண்டியதில்லை;அவர்களாகவே கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டிய நிலை வரும் என்று திமுக துணைப் பொதுச் செயலர்ஸ்டாலின் கூறினார்.

நாமக்கல்லில் நடந்த திமுக சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைத்து அவர் பேசியதாவது:

தமிழக அரசியல் வரலாற்றிலேயே எந்த அணிக்கும், எப்போதும் கிடைக்காத வெற்றி, திமுக தலைமையிலானஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்குக் கடந்த மக்களவைத் தேர்தலில் கிடைத்தது.

தமிழக அரசுக்கு மக்களவைத் தேர்தல் நல்ல பாடம் கற்பித்துள்ளது. சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தல் வரும்என்று மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கூறியிருந்தேன்.

அதற்காக ஜெ. ஆட்சியை நாம் கலைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களாகவே கலைத்துவிட்டு, தேர்தல்நடத்த வேண்டிய நிலை வரும். அது எப்படி என்றெல்லாம் கூறத் தேவையில்லை.

அவ்வாறு தேர்தல் வரும்போது திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான கூட்டணியே ஆட்சியைப் பிடிக்கும்என்பதை யாராலும் மாற்ற முடியாது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை மிக மோசமாகவுள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்புச் சம்பவங்கள்அதிகரித்துள்ளன. குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல் துறையினரது குடியிருப்புகளிலேயே கொள்ளைநடக்கிறது.

இத்தகையை சூழலை மக்களுக்கு எடுத்துக் காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தவே சைக்கிள் பேரணிநடத்தப்படுகிறது என்று பேசினார் ஸ்டாலின்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+