வழக்கறிஞர்கள் ஸ்டிரைக் தொடங்கியது
சென்னை:
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்ட 25 கட்டுப்பாடுகளை நீக்குதல், தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டிக்கு கட்டாயஓய்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவை மாநிலவழக்கறிஞர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
வழக்கறிஞர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 25 கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும், தலைமை நீதிபதி சுபாஷன்ரெட்டிக்கு கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும், திருச்சி, கரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மதுரை உயர்நீதிமன்றக்கிளையுடன் நீடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்றபோராட்டம் நடத்த ஈரோட்டில் நடந்த சங்க பொதுக்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது. இதில் சென்னைஉயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் பங்கேற்கவில்லை. இருப்பினும் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர்மட்டும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். உயர்நீதிமன்றம் தவிர தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்துநீதிமன்றங்களிலும் இதனால் நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications