For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீர்த்தனுக்கு தலைமை தணிக்கை அதிகாரி கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அரசின் நிதி நிலை குறித்த அறிக்கையை செய்தியாளர்களிடம் வெளியிட்ட விவகாரம் தொடர்பாக முழுவிளக்க அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக தணிக்கை அதிகாரி தீர்த்தனுக்கு மத்திய தலைமை தணிக்கைஅதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது, தமிழக அரசின் 2003-04ம் ஆண்டு நிதிநிலை குறித்த கணக்கு விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தீர்த்தன். தமிழக அரசு மீது குற்றம் சாட்டும்விதமாக இருந்த அந்த பேட்டியால் முதல்வர் ஜெயலலிதா கடும் கோபமடைந்தார்.

தமிழக அரசின் விளக்கத்தை முழுப்பக்க விளம்பரமாக இந்தியாவின் முன்னணி நாளிதழ்களில் அவர்வெளியிட்டார். அதோடு நில்லாமல், மத்திய தலைமை தணிக்கை அதிகாரிக்கும் கடும் ஆட்சேபம் தெரிவித்துகடிதம் எழுதினார். சட்டசபையில் இன்னும் வைக்கப்படாத 2003-04ம் ஆண்டு நிதி நிலை அறிக்கை விவரங்களைசெய்தியாளர்களிடம் வெளியிட்ட தீர்த்தன் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

ஜெயலலிதாவின் கடிதத்தின் அடிப்படையில் தற்போது தீர்த்தனுக்கு, மத்திய தலைமை தணிக்கை அதிகாரி ஒருகடிதம் அனுப்பியுள்ளார். அதில் 2003-04ம் ஆண்டுக்கான தமிழக நிதி நிலை குறித்த விவரங்களைசெய்தியாளர்கள் பேட்டியில் வெளியிட்டது தொடர்பாக முழு அளவிலான விளக்கத்தை அனுப்புமாறுகூறப்பட்டுள்ளது.

இந்த விளக்கம் கிடைத்த பின்னர் ஜெயலலிதாவின் புகார்களுக்கு பதில் அனுப்பி வைக்கப்படும் என்றுஜெயலலிதாவுக்கும் மத்திய தணிக்கை அதிகாரி கடிதம் அனுப்பியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X