For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை கடற்படை தாக்கி தமிழக மீனவர் பலி

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம் - சென்னை:

ராமேஸ்வரம் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் இன்றுதுப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒரு மீனவர் பலியானார்.

ராமேஸ்வரத்தை சேர்ந்த ராமு ( 39 ), சேவியர், தனசிங், தில்லைமுத்து ஆகியோர் கடலில் மீன் பிடிக்க சென்றனர்.கச்சதீவிற்கு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அந்த பகுதியில் ரோந்து வந்த இலங்கைகடற்படை வீரர்கள் வானை நோக்கிச் சுட்டனர்.

அடுத்த நிமிடமே படகை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ராமு மார்பில் குண்டு பாய்ந்தது.அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் படகும் சேதமடைந்தது.

ராமுவின் உடலை மற்ற மூவரும் ராமேஸ்வரத்திற்கு கொண்டு வந்தனர். இது குறித்து ராமேஸ்வரம் போலீஸார்விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு வருட இடைவெளியில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர்மிகக் கடும் தாக்குதல் நடத்துவது இதுவே முதல் முறையாகும்.

ரூ. 1லட்சம்: ஜெ. உத்தரவு:

இதற்கிடையே பலியான மீனவர் ராமுவின் குடும்பத்துக்கு ரூ. 1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. அவர்வெளியிட்ட அறிக்கையில், கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மீனவர்ராமுவின் மறைவால் வாடும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத்தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1 லட்சம்வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த கொடிய சம்பவம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் ஆகியோர்கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளேன். இதுபோன்ற சம்பவம் இனியும் நடைபெறாமல் தடுக்க உரியநடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டுள்ளேன்.

மேலும், இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்களையும் அவர்களது படகுகளையும் மீட்க உடனடிநடவடிக்கை எடுக்குமாறும் பிரதமடம் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருணாநிதி கடிதம்:

இதற்கிடையே இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ள 25 நாகப்பட்டனம் மீனவர்களைஉடனடியாக மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி வெளியுறவுத்துறை அமைச்சர்நட்வர் சிங்குக்கு திமுக தலைவர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஆகஸ்ட் 4ம் தேதி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 நாகப்பட்டனம் மாவட்டமீனவர்களை, இலங்கை கடற்படை வீரர்கள் பிடித்துச் சென்று விட்டனர். இதனால் அவர்களது குடும்பத்தினர்பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளன.

கடத்திச் செல்லப்பட்டுள்ள 25 மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பத்திரமாக மீட்பதற்குத் தேவையானநடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X