தாமதமாக வருகை.. திருப்பி அனுப்பிய லாலு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

டெல்லி ரயில்வே பவனில் ரயில்வே அமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் இன்று திடீர் சோதனையில் ஈடுபட்டு காலதாமதமாக வேலைக்கு வந்த சுமார் 500 ஊழியர்களை வாசலிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி வீட்டுக்குஅனுப்பினார்.

இன்று காலை 9.30 மணிக்கு ரயில்வே பவன் வந்த லல்லு பிரசாத் யாதவ், அலுவலகத்தின் அனைத்து நுழைவாயில்களையும் அடைக்கச் சொன்னார். இதனால் காலதாமதமாக வந்த 453 நான் கெசட்டட் ஊழியர்களும், 66கெசட்டட் அதிகாரிகளும் அலுவலகத்துக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டனர்.

1,619 பேர் வேலை செய்யும் அந்த அலுவலகத்தில் 40 சதவீதம் பேர் காலதாமதமாக வேலைக்கு வருவதைக் கண்டுஎரிச்சலடைந்த லாலு, அவர்களை காய்ச்சி எடுத்தார். பின்னர் அனைவரையும் திரும்பி வீட்டிற்குப் போகஉத்தரவிட்ட லாலு, அவர்களின் வருகையை இன்று பதிவு செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்குஅறிவுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லாலு,

தாமதமாக வந்தவர்களுக்கு இன்று ஒரு நாள் சம்பளம் பிடிக்கப்படும். இதுபோன்ற சோதனைகளை இனி அடிக்கடிநடத்துவேன். தொடர்ந்து தாமதமாக வருபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மத்திய அரசுஊழியர்களுக்கு ஏகப்பட்ட சலுகைகளும், வசதிகளும் உள்ளன.

எனவே அவர்கள் காலை 9 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை கட்டாயம் வேலை செய்தே ஆக வேண்டும்என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+