திமுக மாஜி அமைச்சரின் சொத்துக்களை ஜப்தி
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பெரியசாமிக்கு சொந்தமான சொத்துக்களை ஜப்தி செய்யஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்.கே.கே.பெரியசாமி மீதும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் 4 பேர் மீதும் வருமானத்திற்கு மீறியவகையில் சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஈரோடு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று அரசுத் தரப்பில் ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில், என்.கே.கே.பெரியசாமி தனது சொத்துக்களை விற்க முயற்சி செய்வதாகவும், எனவேஅவரது சொத்துக்களை ஜப்தி செய்யுமாறு உத்தரவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனுவை விசாரித்த தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயராமன், என்.கே.கே.பெரியசாமியின் சொத்துக்கள்அனைத்தையும் ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications