திருப்பதி தேவஸ்தான பள்ளிகளில் கட்டாய நாமம்
திருப்பதி:
திருப்பதி-திருமலை தேவஸ்தானம் நடத்தும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அனைவரும் நெற்றியில்கட்டாயம் நாமம் போட்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் கூறியுள்ளது.
திருப்பதி -திருமலை தேவஸ்தானம் சார்பில் திருப்பதியிலும், ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் 34பள்ளி,-கல்லூரிகள் நடத்தப்படுகின்றன.
இங்கு பயிலும் மாணவர்களிடையே பக்தியை அதிகரிக்கும் விதமாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளைதேவஸ்தான போர்டு அறிவித்துள்ளது.
அதன்படி மாணவர்கள், ஆசிரியர்களைப் பார்த்து குட்மார்னிங், குட் ஈவீனிங் சொல்வதற்குப் பதிலாக நமஸ்காரம்கோவிந்தா என்று சொல்லவேண்டும். நெற்றியில் கட்டாயம் நாமம் அல்லது விபூதியுடன் குங்கும பொட்டுவைத்துக் கொண்டு வரவேண்டும்.
அன்னமாச்சார்யாவின் 30 கீர்த்தனைகளை மனப்பாடம் செய்து தினமும் பாட வேண்டும். இந்த பழக்கங்களைஅந்தந்த பள்ளி ஆசிரியர்கள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.
வரும் செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இத் திட்டத்தை அமுல்படுத்த தேவஸ்தானம் முடிவு செய்துஉள்ளது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.